நிதி ஆயோக் தரவரிசை பட்டியல் – தமிழகம் 3வது இடம்!!
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச தரவரிசை பட்டியல் விதிமுறைகளின்படி பிரித்து அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் நிறுவனம் தயார் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் தரவரிசை பட்டியல்:
2020 ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் தரவரிசை அமைப்பு வெளியிட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மாநிலங்களின் ஈடுபாடுகள், கண்டுபிடிக்க கொடுக்கப்பட்ட ஊக்குவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள கொள்கைகளில் பலம் மற்றும் பலவீனம் குறித்து சுட்டிக்காட்டி உள்ளது.
ஜனவரி 29ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இது குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் மற்றும் CEO அமிதாப் கந்த் கூறுகையில், “2020-ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 5 இடங்களை பிடித்த மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, மற்றும் கேரளா உள்ளன. கடைசி மாநிலங்களாக ஜார்கண்ட், பிஹார் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் உள்ளன. இந்த அறிவிப்பு மூலம் மாநிலங்கள் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பாக இவை அமைகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்