NIT திருச்சியில் தேர்வில்லாத வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு தகவல்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இன்றே பதிவை வாசித்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Semi-Skilled Worker பணிக்கு என்று மொத்தமாக ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Chemistry பாடப்பிரிவில் B.Sc. டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
- பதிவுதாரர்கள் ஆராய்ச்சி அல்லது தொழில்துறைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
All TNPSC Notification 2022
- Sample collection, Mineral beneficiation of collected samples, Chemical analysis of minerals, Characterization of minerals, Report preparation and basic calculations using MS Office போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்.
- Semi-Skilled Worker பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ஒரு வருகைக்கு ரூ.546/- ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இப்பணிக்காக கால அவகாசம் 15.02.2022 நாளையுடன் நிறைவடைகிறது. எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.