NIT திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.31,000/- சம்பளம்
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) சமீபத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில், காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 08.07.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியான அறிவிப்பில், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Metallurgy, Metallurgical Engg., Metallurgical and Materials Engineering, Materials Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech / Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Join Our TNPSC Coaching Center
- இவ்வாறு JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
NIT Trichy விண்ணப்பிக்கும் விதம்:
தேசிய தொழில்நுட்ப நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.07.2022 ம் தேதிக்குள் வருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க (08.07.2022) இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.