NISG தேசிய நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்..!
ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனத்தில் (NISG) கடந்த சில நாட்களுக்கு முன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. Project Coordinator (E-Learning Solutions) / Content Manager பணிக்கு பல்வேறு பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பிக்க தேவையான விவரங்களை தெரிந்து கொண்டு இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
NISG தேசிய நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனத்தில் (NISG) Project Coordinator (E-Learning Solutions) / Content Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Project Coordinator (E-Learning Solutions) / Content Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Journalism, Mass Communication, Marketing பாடப்பிரிவில் Graduate Degree / PG Diploma Graduate / Master Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Managing Content Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- PMP, Mass Communication, Content Management, Process Improvement, CSM, Project Planning மற்றும் Delivery Management போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Project Coordinator (E-Learning Solutions) / Content Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.12 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.16 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
- இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
NISG விண்ணப்பிக்கும் விதம்:
இந்த NISG தேசிய நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 23.06.2022 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, எனவே நாளைக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையவும்.