சென்னை தேசிய சித்த நிறுவனத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
தேசிய சித்த சென்னை நிறுவனம் (NIS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Manager, Public Health Specialist பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Manager பணிக்கு 01 பணியிடம் மற்றும் Public Health Specialist பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக இரண்டு பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
- Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BSMS டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் M.D. (Siddha) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Project Manager மற்றும் Public Health Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
- Project Manager பணிக்கு ரூ.46,000/- என்றும் Public Health Specialist பணிக்கு ரூ.40,000/- என்றும் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதியான விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது 09.06.2022 ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.