மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி Consultant பணிக்கு ஆள் நிரப்பப்படவுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute for Research in Tuberculosis (NIRT) |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தேசிய ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தற்போது Consultant பணிக்கென மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Consultant (Server Administrator) – 1
- Consultant (System Administrator) – 1
NIRT கல்வித்தகுதி:
இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் BE / B.Tech / ME / M.Tech டிகிரி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
NIRT வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயது மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தேசிய ஆராய்ச்சி நிறுவன ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைப்படி தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். ஊதியம் குறித்த தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடவும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
NIRT தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் (INTERVIEW) வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
தேசிய ஆராய்ச்சி நிறுவன விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கீழே கொடுத்துள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும். 24.01.2022 தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.