விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய நிரூப் – இறுதி சுற்றில் நுழைந்த டாப் 5 போட்டியாளர்கள்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி இறுதி வாரத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது மனதை கவர்ந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே நான்கு சீசன்கள் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். தற்போது 95 நாட்களை கடந்து இறுதி வாரத்திற்கு வந்துள்ளது. தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் வெளியேறி 5 பேர் இறுதி சுற்றிற்கான பிரம்மாண்ட மேடைக்கு செல்வார்கள்.
‘மெட்டி ஒலி’ உமாவின் நிறைவேறாத ஆசை இது தான்? நடிகை லீலா நெகிழ்ச்சி தகவல்!
அவர்களில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். அவர்களுக்கு பிக்பாஸ் கோப்பையும் ரூ. 50 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும். தற்போது பிரியங்கா, ராஜு, அமீர், தாமரை, பாவ்னி, நிரூப் ஆகியோர் விளையாடி வரும் நிலையில் அமீர் இறுதி சுற்றிற்கு சென்றிருக்கிறார். அடுத்து நாமினேட் செய்யப்பட்டவர்களில் பிரியங்கா மற்றும் ராஜு மக்களிடம் அதிகமான வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அடுத்த இடத்தில் தாமரை மக்களின் அதிகமாக வாக்குகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!
அடுத்து நான்காம் இடத்தில் பாவ்னியும் குறைவான வாக்குகளுடன் நிரூப் கடைசி இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனால் இந்த வாரம் நிரூப் வெளியேற அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதனால் பிரியங்கா ராஜு, தாமரை, பாவ்னி, அமீர் ஆகியோர் இறுதி சுற்றில் போட்டி போட இருக்கின்றனர். இந்த சீசனில் அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்பது கேள்வி குறியாகவே இருக்கிறது.