கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் – நிபா வைரஸ் எதிரொலி!!

0
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் - நிபா வைரஸ் எதிரொலி!!
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் - நிபா வைரஸ் எதிரொலி!!
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் – நிபா வைரஸ் எதிரொலி!!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் காரணம் காரணமாக தமிழகத்திற்கு வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விதித்துள்ளார்.

நிபா வைரஸ்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நட்சத்திரங்கள்!

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அதனால் தமிழக எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஜிகா வைரஸ் வந்தபோதே கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டோம். தொடர்ந்து கேரளாவின் எல்லைப்புறப் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் உள்ளதா போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே எல்லை பகுதிகளுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படுவதாக செய்தி வந்துள்ளது. அதுகுறித்த தகவல் தெரிந்ததும் கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளுக்கும் வைரஸ் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்.14 வரை பள்ளிகளை மூட உத்தரவு, ஆன்லைனில் தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!

அவர்களிடம் பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், காய்ச்சல் முகாம்களை எல்லையோரம் அதிகரிக்கவும் கூறி இருக்கிறோம். தமிழக சுகாதாரத்துறை மிகச் சிறந்த கட்டமைப்பில் உள்ளது. புதிய வைரஸ்கள் வரும்போது அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு நம்மிடம் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாகத் தமிழகம் பாதுகாப்பாகவே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!