10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – NIOS அறிவிப்பு!!
தேசிய திறந்தநிலை பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடந்த நிலையில், தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய திறந்த நிலை பள்ளி:
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS) இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியமாகும். ஊரகப் பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது.
நீட் தேர்வுகள் ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!
தேர்வுகள்:
தேசிய திறந்தநிலை பள்ளியின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடந்தது. தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வின் முடிவுகளை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளதாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தின் பொதுத்தேர்வுகளை எழுதியவர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான https://results.nios.ac.in சென்று தங்கள் தேர்வு எண்ணை உள்ளிட்டு தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்