தமிழக ரேஷன் கடைகளில் விடுமுறை நாள் மாற்றம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை நாள் மாற்றம்:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகள் இயங்கும் நாள், விடுமுறை நாள்களில் மாற்றங்கள் காணப்படுவது உண்டு. அதன் படி நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் இயங்கும் நாட்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரேஷன் கடைகளில் வெள்ளிக் கிழமைகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விடுமுறை நாள் மாற்றப்பட்டு ஞாயிற்றுக் கிழமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் படி மாநிலம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்குடன், ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளான ஏப்ரல் 23, 30 ஆகிய நாட்கள் வேலை நாட்களாகவும், ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும். அந்த நாட்களில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்’ என அறிவித்துள்ளார்.