5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலை !
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், நடுஹட்டி மற்றும் கோடநாடு ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 18-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | நீலகிரி மாவட்டம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 18.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழகத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
நீலகிரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம உதவியாளர் வயது வரம்பு :
01.01.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி :
- கோத்தகிரி வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 18-01-2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Good