கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இரவு ஊரடங்கு உத்தரவு – புதிய கட்டுப்பாடுகள்!

0
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இரவு ஊரடங்கு உத்தரவு - புதிய கட்டுப்பாடுகள்!
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இரவு ஊரடங்கு உத்தரவு - புதிய கட்டுப்பாடுகள்!
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இரவு ஊரடங்கு உத்தரவு – புதிய கட்டுப்பாடுகள்!

கர்நாடகாவில் ஓமைக்ரான் வழக்குகள் அதிக அளவில் பதிவாகி வருவதால் புருஹத் பெங்களூரு மாநகர பலிகே (பிபிஎம்பி) மாநிலம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற நிகழ்வுகளின் கூட்டங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு:

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை எட்டாக உயர்ந்துள்ளது. இதனால் பெங்களூரு மாநகரத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தது. இருப்பினும் டிசம்பர் 16 அன்று, மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவித்திருந்தார்.

இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது – ஷாக் அறிவிப்பு!

அப்போது பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, அரசு ஒரு வார காலம் நிலைமையைக் கவனித்து பின்னர் ஒரு முடிவை எடுக்க விரும்புவதாகவும், இரவு ஊரடங்கு உத்தரவு போன்ற ஏதேனும் சிறப்பு தடைகள் குறித்து நிலைமையைப் பார்த்து முடிவு செய்ய இருப்பதாகவும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ஓமைக்ரான் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிபிஎம்பி தலைமை ஆணையர் கௌரவ் குப்தா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது பற்றி இதுவரை அரசுக்கு தெரிவிக்கவில்லை. அரசு நியமித்துள்ள தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பேரில் உயர்மட்டக் குழு முடிவெடுக்கும்.

நோய்த்தொற்று அதிகமுள்ளதாக பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நாங்கள் RTPCR சோதனையை கட்டாயமாக்கியுள்ளோம். கோவிட் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் எட்டு நாட்கள் கட்டாயமாக தனியாக தங்கியிருக்க வேண்டும். எட்டாவது நாளில் சோதனை மீண்டும் செய்யப்படும், மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னதாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்கள் அன்று மட்டும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!

ஆனால், BBMP இன் சிறப்பு ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் கே.வி. திரிலோகச் சந்திரா, புத்தாண்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இரவு ஊரடங்கு உத்தரவை அனுமதிக்கும் வகையில் வரைவு விதிகளை உருவாக்குமாறு மூத்த காவல் அதிகாரிகள் மற்றும் பிபிஎம்பி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. டிசம்பர் 30 அல்லது 31 தேதிகளில் திடீரென இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மக்களைக் கட்டுப்படுத்துவது கடினம். நான்கு நாட்களுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தினால் நிலைமையை கட்டுப்படுத்துவது எளிதாகும் என கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!