பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!

0
பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!
பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!
பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!

மாநிலம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் பொழுதுபோக்கு பூங்காக்கள், கண்காட்சிகள் ஆகியவை மீண்டும் செயல்படுவதற்கு ஹரியானா மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கூடுதல் தளர்வுகள்

கடந்த மாதம் முதல் நிலவி வரும் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக ஹரியானாவில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் முழு முடக்கம் என்ற அளவில் இல்லாமல் வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம் ஹரியானாவில் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட மாநில நிர்வாகம் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை முழு திறனில் செயல்பட அனுமதி கொடுத்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் ரூ.62,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும், சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கண்காட்சி அரங்குகளை 50% திறனுடன் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இது தவிர துணை ஆணையரிடம் அனுமதி பெற்று 100 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வழக்கம் போல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு – இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!

இதனுடன் வெகுஜன கூட்டங்கள், பொது பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஹரியானா மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும். இதற்கு முன்னதாக ஹரியானாவில் கடந்த வாரம் முதல் மால்கள் மற்றும் சந்தைகளின் செயல்பாட்டு நேரத்தை இரவு 7 மணி வரை நீட்டித்து, மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களை 50% திறனில் செயல்பட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!