மதுரை விமான நிலையத்தில் இரவிலும் விமான சேவை? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தின் மதுரை மாவட்ட விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
விமான இயக்கம்:
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. இதில் மதுரை விமான நிலையம் துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. தற்போது வரை மதுரை விமான நிலையம் “கஸ்டம்ஸ்” விமான நிலையமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் திருச்சி, சென்னை விமான நிலையங்களை நாட வேண்டி உள்ளது. அதனால் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக ரன்வேயில் நீளத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரி பொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று முதல் துவக்கம்!
ஆனால் ஓடுதளம் சிறியதாக இருப்பதால் மதுரையை சர்வதேச விமான நிலையமாக்கும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது இன்னும் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என மத்திய அரசு பதிலளித்தது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இரவு விமானங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு லகு உத்தியோக பாரதி தலைவர் அருணாசலம் மத்திய அமைச்சர் முரளிதரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக்கி நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும்.
மேலும் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் மதுரையில் இறங்க ஏதுவாக ஓடுபாதையை 12,000 அடியாக நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அளித்த பதில் மனுவில் மதுரையில் இரவு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன் வந்தால் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மதுரை சர்வதேச கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரு வழி விமான ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.