தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்? முதலமைச்சர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் கடந்த சில தினங்களாக தீவிரமாக பரவி வருவதால் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவுநேர ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிகாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 213க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசுத்தொகை இல்லை?
இவ்வாறு நாளுக்கு நாள் தொற்று தீவிரமாவதால் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. அதனால் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் வரும் டிச.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 33 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் பொதுமுடக்கம் மற்றும் பண்டிகைக்கு தடை வித்திக்கப்படுமோ என்ற அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தியாவில் 2022 முதல் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – PF அதிகம் கிடைக்குமா?
மேலும் இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவுகளை வெளியிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 11.30 மணியளவில் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த ஆலோசனை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.