ஏப்ரல் 1 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு, இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
தேசிய தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கி, பள்ளிகளை முழுமையாக திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 28 முதல் முடிவடையும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதாவது தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (பிப்.25) கொரோனா தொடர்பான மறுஆய்வுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், இரவு ஊரடங்கு உத்தரவை முடித்து பள்ளிகளை முழுமையாக திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அரசாணை வெளியீடு!
அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டால், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இரவு வரை திறந்திருக்கும் என்றும் மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய அரசாங்கம் கடுமையான கண்காணிப்பில் இருக்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். தவிர முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு ரூ.1,000 லிருந்து ரூ.500 வரை அபராதம் குறைக்கப்படும் என்று DDMA அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 1 முதல் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிக்கை!!!
இதற்கு முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சில வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க அரசு அனுமதித்தது. அதே போல இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மத நிகழ்வுகள் மற்றும் இரவு ஊரடங்கு ஆகியவற்றிற்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.