ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு நேர ஊரடங்கு நீக்கம்! அரசு அனுமதி!
டெல்லியில் சமீப காலமாக கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொற்று வீழ்ச்சியடைந்து வருவதால் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வேலை இழப்பு காரணமாக கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் DDMA திரும்பப் பெறுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் முழுமையாக ஆப்லைனில் செயல்படும்.
உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி – 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!
பொது இடங்களில் முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. என்றாலும் கொரோனா பொருத்தமான நடத்தையை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை அரசு கடுமையாக கண்காணிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது டெல்லி அரசின் இந்த முடிவானது லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் தலைமையில் நடைபெற்ற DDMA கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவது மற்றும் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து டெல்லி முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் முழுவதுமாக ஆப்லைனில் செயல்பட இருக்கிறது. இதற்கிடையில், டெல்லியில் கொரோனா வழக்குகள் 20,000க்கும் குறைவாகப் பதிவாகி வருவதால், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, இந்தியா தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை முடிவு கட்டத்தை நெருங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,166 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 302 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.