மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? முதல்வர் விளக்கம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி இருக்கும் அரசு கொரோனா பராமரிப்பு மையங்களை மூடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இரவு ஊரடங்கு
கடந்த மாதத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் தீவிரமடைந்து வந்ததையடுத்து விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச மாநில அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, இம்மாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளதாக உறுதியளித்த அரசு, ஹோலி மற்றும் ரங்கபஞ்சமி பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி இருக்கிறது.
3 முக்கிய மாநிலங்களில் பள்ளி & கல்லூரிகள் மூடல் – விமானங்கள் ரத்து! புயல் எதிரொலி!
அந்த வகையில் பொது மக்களிடம் கொரோனா பொருத்தமான நடத்தையை பின்பற்றவும், முகக்கவசங்களை அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பராமரிப்பு மையங்கள் இப்போது மூடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அரசாங்கம், ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் ஒரு வார்டு கொரோனா நோயாளிகளுக்காக காலியாக வைக்கப்பட வேண்டும்.
கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை? உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி!
வென்டிலேட்டர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் லைன்களை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதனுடன் தொற்றுநோயைச் சமாளிக்க மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை சிறப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்ய சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் கணிசமான அளவு குறைந்து நேர்மறை விகிதம் 1.2% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.