8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய் தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களில் மட்டும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு அமல்
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலையை ஆய்வு செய்த பின்னர், மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக முதல்வர் பசவராஜ் அறிவித்துள்ளார். அதாவது கர்நாடகாவின் அண்டை மாநிலமான கேரளாவில் நோய் தொற்று பாதிப்பு புதிய எழுச்சியை கண்டு வருவதால் கேரளா எல்லைகளிலும், அதே போல மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பலாம் – பயனர்கள் கவனத்திற்கு!
அந்த வகையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படும் மாவட்டங்களை பொறுத்தவரை, மகாராஷ்டிராவின் எல்லையில் உள்ள பெலகாவி, பீதர், விஜயபுரா மற்றும் கலபுராகி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் கேரளாவை எல்லையாகக் கொண்ட தட்சிண கன்னடம், குடகு, மைசூர் மற்றும் சாமராஜநகரா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் ஒரு மணி நேரம் தளர்த்தப்பட்டு, இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பாக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் துஷார் கிரி நாத் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, மத நிகழ்ச்சிகள் மற்றும் பிற கூட்டங்கள் தடைசெய்யப்படும். திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 100 பேருக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இறுதிச் சடங்குகள் அதிகபட்சம் 20 பேருடன் நடத்தப்படலாம். இது தவிர கேரளா, மகாராஷ்டிரா எல்லையில் விதிக்கப்பட்டுள்ள வார இறுதி ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
- வார இறுதி ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்களில், அத்தியாவசிய மற்றும் அவசர நடவடிக்கைகள் தவிர, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- உணவு, மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி , மீன், பால் மற்றும் விலங்கு தீவன கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.
- தெரு விற்பனையாளர்கள், பொது விநியோக அமைப்பு கடைகள் மற்றும் தனித்தனி மதுபானக் கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- தனிநபர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நடமாடுவதைக் குறைப்பதற்காக அனைத்து பொருட்களின் வீட்டு விநியோகமும் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- அதே நேரத்தில் உணவகங்களிலும் வீட்டு விநியோகத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
- விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது போக்குவரத்து, தனியார் வாகனங்கள் மற்றும் டாக்ஸிகள், விமானம், ரயில் மற்றும் சாலை வழி பயணங்கள் அனுமதிக்கப்படுகிறது,
- ஆனால் முறையான பயண ஆவணங்களைக் காண்பிக்கும் போது மட்டுமே இயக்கம் அனுமதிக்கப்படும்.
- அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் நிறுவன ஊழியர்களின் இயக்கம், அந்தந்த அமைப்பு அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.