மாவட்டத்தில் பிப்.14 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – ஆட்சியர் அறிவிப்பு!

0
மாவட்டத்தில் பிப்.14 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் - ஆட்சியர் அறிவிப்பு!
மாவட்டத்தில் பிப்.14 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் - ஆட்சியர் அறிவிப்பு!
மாவட்டத்தில் பிப்.14 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – ஆட்சியர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அம்மாநில அரசு ஜனவரி 11 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அதில் பிப்ரவரி 14 ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு உத்தரவு:

உலக நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3 வது அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச தீவிர தன்மையுடன் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF பேலன்சை சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அம்மாநில அரசு ஜனவரி 11 ஆம் தேதி புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதில் திருமணங்கள், மதக் கூட்டங்கள், சமூக நடவடிக்கைகள் போன்ற அனைத்து கூட்டங்கள் மற்றும் வெளிப்புற இடங்களில் அதிகபட்சமாக 200 பேர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் நகர்ப்புற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட கூடாது என்றும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதை தொடர்ந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் படி பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லவில்லை. இதனால் காக்கிநாடாவில் நோய் தொற்று குறைந்து வருவதாக அம்மாநில மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க ஆந்திர அரசு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீடித்துள்ளது. இதனை நேற்று செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் சேவூரி ஹரி கிரண் உறுதிசெய்தார். மேலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 188 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!