ஜூன் 21 முதல் இரவு ஊரடங்கு நேரம் குறைப்பு, கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 21ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கூடுதல் தளர்வுகள்:
கொரோனா தொற்றின் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வந்தது. இதனால் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி பணிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை போன்ற நடவடிக்கைகளால் தற்போது அங்கு தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது நேர்மறை விகிதம் 0.1 ஆக குறைந்துள்ளது.
ஜூன் 16 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
உத்தரபிரதேசத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கத்திற்கு பின்னர் முதன்முறையாக கடந்த ஞாயிற்று கிழமை நிலவரப்படி, புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதனால் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய மறுஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தினார். அதில், கொரோனா ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வுகள் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ஜூன் 21 முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலும் இருந்தது. உணவகங்கள் மற்றும் மால்கள் 50% ஊழியர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், பூங்காக்களும் ஜூன் 21ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.