செப்.13 வரை இரவு, வார இறுதி ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
செப்.13 வரை இரவு, வார இறுதி ஊரடங்கு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
செப்.13 வரை இரவு, வார இறுதி ஊரடங்கு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
செப்.13 வரை இரவு, வார இறுதி ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தட்சிண கன்னட மாவட்டத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்து கொண்டிருக்கும் சூழலில், கேரளா மாநிலத்தில் மட்டும் புதிய பாதிப்புகள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு வரும் மொத்த பாதிப்புகளில், பாதியளவு (30,000) கேரளா மாநிலத்தில் மட்டும் ஏற்பட்டு வருகிறது. இந்த பாதிப்புகள் கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்.6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இதனால் கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தட்சிண கன்னடம் என்ற கர்நாடகா மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அம்மாவட்டத்தில் மட்டும் தினசரி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையும் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்த தட்சிண கன்னட மாவட்ட துணை கமிஷனர் கேவி ராஜேந்திரா, ‘கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கர்நாடகாவின் மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்பிலான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 13 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும் அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தட்சிண கன்னட மாவட்டத்தில் விடுதிகளில் தங்க வரும் நர்சிங், துணை மருத்துவம் மற்றும் பிற மாணவர்கள் கொரோனா எதிர்மறை சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் திருமணங்களில் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் நேற்று (செப்டம்பர் 1) ஒரு நாளில் 1,159 புதிய பாதிப்புகள் மற்றும் 21 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!