இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நாள்தோறும் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தை ஒரு மணி நேரம் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அம்மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பகல் நேர ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள், மால்கள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
மேலும் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சனி, ஞாயிற்று கிழமைகள் தோறும் விதிக்கப்பட்டிந்த வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில கூடுதல் தளர்வுகளை அளித்தது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி இரவு நேரங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தற்போது தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் இனி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை – EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!
இந்த அறிவிப்புக்கு முன்னதாக அம்மாநிலத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புதிய பாதிப்புகளின் வீழ்ச்சியை கண்டு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளார். தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காணப்படுவதால் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே உத்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 புதிய கொரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.