நவ.10ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பண்டிகை கால வழிகாட்டுதல்கள் வெளியீடு!
குஜராத் மாநிலத்தின் கிட்டத்தட்ட 8 முக்கிய நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்புடைய இரவு நேர ஊரடங்கு உத்தரவானது வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் வெகுவாக குறைந்திருக்கும் பட்சத்தில் பல்வேறு மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்திலும் தற்போது முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருந்து வருகிறது.
ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பின் கீழ், குஜராத் மாநிலம் முழுவதும் அக்டோபர் மாதம் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வரவிருக்கும் பண்டிகை காலம் குறித்த கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஈத்-இ-மிலாது பண்டிகைக்காக, முறையான கட்டுப்பாடுகளுடன் ஊர்வலங்களுடன் பண்டிகையை கொண்டாட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா – ரசிகர்கள் உற்சாகம்!
அதன் கீழ் தலா 15 நபர்கள் மற்றும் ஒரு வாகனத்துடன் பகல் நேரங்களில் மட்டும் ஊர்வலங்களை நடத்த அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவரவர் வசிக்கும் இடங்களில் மட்டுமே ஊர்வலங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஊர்வலங்களின் போது முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.