ஜூலை 20 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மணிப்பூர் அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூலை 20 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நாட்களில் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை, ஜூலை 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்காக அமல்படுத்துவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் தினசரி இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். அதாவது மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா நிலைமையை தொடர்ந்து ககவனித்து வருவதாகவும், நோய்த்தொற்று பரவுவதை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – குஜராத் அரசு முடிவு!!
இது குறித்த உத்தரவில், மணிப்பூர் தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார், ‘மாநிலம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் மூடப்படும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தனித்து இயங்கும் கணினி மற்றும் மொபைல் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்கப்படலாம். மேலும், கொரோனா பாதிப்பு சூழ்நிலை மற்றும் தடுப்பூசியின் முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்து மாநிலம் முழுவதும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கொடுக்கப்பட்டிருந்த தளர்வுகளின் படி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்காக ஜூலை 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில், காலை 7 மணி முதல் 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை கண்டிப்பான முறையில் செயல்படுத்த துணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர மணிப்பூர் மாநிலத்தில் நேற்று (ஜூலை 9) ஒரு நாளில் 852 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 19 இறப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.