ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு ஜூன் 16 முதல் 22 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தளர்வுகள் குறித்த அறிவிப்பை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஜூன் 15 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
ஆனால் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை பல தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்கள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
பீகார் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை மாலை 4 மணி வரை 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வாகனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏழு நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 703,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.