மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!

0
மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து அறிவியல் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று அறிவித்துள்ளார்.

ஊரடங்கு நீக்கம்:

கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறை கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த வகை தொற்று அதிக வேகத்தில் பரவும் என்பதால் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் கொரோனா பரவும் விகிதத்தை பொறுத்து வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – SMS அலெர்ட்! RBI முக்கிய அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்திலும் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பல தொழில்களும் மிகவும் பாதிக்கப்படுவதால், அவற்றை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமையான இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாரயிறுதி மற்றும் இரவு ஊரடங்கு உட்பட மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவு அறிவியல் அடிப்படையில் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது? ஆன்லைன் தேர்வுகளுக்கு அரசு அனுமதி!

மாநிலத்தில் கோவிட்-19 நிலைமை குறித்த நிபுணர் குழு உறுப்பினர்களுடனான முக்கிய சந்திப்பிற்கு பிறகு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.,க்கள் மற்றும் அமைப்புகளும் இந்த விஷயம் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கர்நாடகா அரசு ஏழ்மை நிலை மக்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் வழங்கி வருவதாக கூறியுள்ளார். தற்போதுள்ள கோவிட் கட்டுப்பாடுகளாக உள்ள இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவுகளை ஜனவரி இறுதி வரை நீட்டிக்க அரசு முன்னதாக முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிபுணர்களின் எச்சரிக்கையின் படி, இந்த மாத இறுதியிலும் பிப்ரவரி தொடக்கத்திலும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!