பிப்.28 வரை மீண்டும் இரவு ஊரடங்கு & புதிய தளர்வுகள் அறிவிப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

0
பிப்.28 வரை மீண்டும் இரவு ஊரடங்கு & புதிய தளர்வுகள் அறிவிப்பு - மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
பிப்.28 வரை மீண்டும் இரவு ஊரடங்கு & புதிய தளர்வுகள் அறிவிப்பு - மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
பிப்.28 வரை மீண்டும் இரவு ஊரடங்கு & புதிய தளர்வுகள் அறிவிப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அவர்கள் மாநிலத்தில் குறைந்து வரும் நோய் அபாயத்தை முன்னிட்டு கொரோனா நோய் தொற்று கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளார். இதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்:

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்று பரவல் மிகவும் தீவிரமடைந்து வந்தது. இதனால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டது. இந்த வகை வைரஸ் தொற்றானது அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் முன்னர் இருந்ததை விட நோய் தடுப்புக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – கல்வித்துறை ஆலோசனை!

இதே போல் ஒடிசா மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் முதல்வர் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளார். அதன்படி இரவுநேர ஊரடங்கிலும், முன்னர் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் தளர்வுகளை அளித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:
  • கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள் ஆகியவை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் இது போன்ற இடங்களும் பிப்ரவரி 28 வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
  • அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை பள்ளிகளில் சரஸ்வதி பூஜைக்கு அரசு அனுமதிக்கிறது.
  • நகர்ப்புறங்களில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்காது.
  • மகா சப்தமி அன்று நீராடுவதற்காக ஆற்றங்கரைகள், மலைத்தொடர்கள், குளங்கள் மற்றும் கடற்கரைகளில் பெரிய கூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
  • மாநில அரசு, பொது நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களும் கோவிட்-19 நெறிமுறையை கண்டிப்பாக கடைபிடித்து முழு பணியாளர்களுடன் செயல்படும்.
  • ஆன்லைன் முறையில் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்த ஊக்குவிக்கப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!