தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

0
தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரவுநேர ஊரடங்கு:

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலால் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழக அரசு திடீரென நேற்று கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!

இந்த இரவு நேர ஊரடங்கானது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு நேரங்களில் பொது மற்றும் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படும் என்றும், பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் விண்ணப்பம், நிலை சரிபார்ப்பு!

இத்தகைய கண்காணிப்பு பணிகளின் போது அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இரவு 10 மணிக்கு முன்னரே பணிகளை முடித்து விட வேண்டும். மேலும் இதர மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்து செல்பவர்கள் அதற்கான ஆவணத்தை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!