பிப்ரவரி 14 வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு உத்தரவு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தற்போது அமலில் இருந்து வரும் இரவு ஊரடங்கு உத்தரவை அடுத்த 2 வாரத்திற்கு அதாவது, பிப்ரவரி 14ம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு உத்தரவு
மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 14ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிகள் திறப்பு எதிரொலி!
ஆந்திராவில் தினமும் சுமார் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நேற்று ஒருநாளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்திருக்கிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு கவலையை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசு அந்த உத்தரவில் அறிவுறுத்தி உள்ளது.
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய கிறிஸ் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இப்போது ஆந்திர மாநிலம் முழுவதும் திருமணங்கள், மதக் கூட்டங்கள், சமூக நடவடிக்கைகள் போன்ற அனைத்து கூட்டங்களிலும் அதிகபட்சமாக 200 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றைய (ஜன.31) புள்ளிவிவரங்களின்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் 5,879 பேருக்கு புதிதாக பாதிப்புகள் , 9 பேர் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.