மேலும் 2 வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அம்மாநில அரசு ஜனவரி 11 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அதில் மேலும் 2 வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு உத்தரவு:
உலகில் 90 நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3 வது அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச தீவிர தன்மையுடன் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது.
மீண்டும் பிப்.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள்! மாநில அரசு அறிவிப்பு!
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அம்மாநில அரசு ஜனவரி 11 ஆம் தேதி புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதில் திருமணங்கள், மதக் கூட்டங்கள், சமூக நடவடிக்கைகள் போன்ற அனைத்து கூட்டங்கள் மற்றும் வெளிப்புற இடங்களில் அதிகபட்சமாக 200 பேர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் நகர்ப்புற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட கூடாது என்றும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!
இதை தொடர்ந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லவில்லை. இதனால் ஆந்திராவில் நோய் தொற்று குறைந்து வருவதாக அம்மாநில மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க ஆந்திர அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கை நீடித்துள்ளது. பிப்ரவரி 14 வரை இரவு ஊரடங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.