10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு NIELIT நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.30,000/-
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Resource Person, Multi-Tasking Staff பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) Resource Person, Multi-Tasking Staff பணிகளுக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- Resource Person (Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றார்ப்போல் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.200/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.