தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Assistant, Consultant, Jr. Consultant, Project Scientist and Other பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (ICMR-NIE) காலியாக உள்ள Project Assistant (admin), Consultant (Epidemiology), Junior Consultant (Epidemiology), Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Assistant, Project Scientist-B (Non-Medical) (Lab), Project Junior Consultant, Project Scientist-B (Non-Medical), Project Scientist-C ஆகிய பணிகளுக்கு தலா 1 இடம் வீதம் மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, Graduation, Diploma, MBBS, MD, MAE, MPH, BDS, Master Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.
சிறந்த coaching centre – Join Now
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.