தேசிய புலனாய்வு அமைப்பில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 60+ காலிப்பணியிடங்கள்..!
தேசிய புலனாய்வு அமைப்பில் (NIA) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Sub Inspector & Inspector பணிக்கு என்று மொத்தமாக 67 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
National Investigation Agency (NIA) வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Sub Inspector & Inspector பணிக்கு என்று மொத்தமாக 67 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் Inspector பணிக்கு 27 பணியிடம் மற்றும் Sub Inspector பணிக்கு 79 பணியிடம் என பிரிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் ஒத்த பதவிகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- Inspector பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு Pay Matrix Level – 7 என்கிற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.
Best TNPSC Coaching Center – Join Now
- Sub Inspector பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு Pay Matrix Level – 6 என்கிற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று வெளியாகிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NIA விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பை பெற்று, அதில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணத்தில் விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி, விண்ணப்பிக்கவும். எனவே இன்றே விண்ணப்பித்து பயனடைய தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.