NHPC ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – 133 காலிப்பணியிடங்கள்..!
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Junior Engineer பதவிக்கு தற்போது 133 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NHPC ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
NHPC காலிப்பணியிடங்கள்:
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Engineer பதவிக்கு மொத்தம் 133 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
NHPC கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma படித்திருப்பது அவசியமாகும்.
All TNPSC Notification 2022
NHPC வயது வரம்பு:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NHPC ஊதிய விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது மாத ஊதியமாக ரூ.29,600/- முதல் ரூ.1,19,500/- பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
NHPC விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் Gen / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.295/- மட்டும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் SC / ST / PWD / EXSM வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
NHPC தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Online Test வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NHPC விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரப் பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.02.2022 அன்றைய தினத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (21.02.2022) இப்பணிக்கு இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.