ரூ.10,000 சம்பளத்தில் தேசிய சுகாதார மைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூன் 10 இறுதி நாள்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய சுகாதார பணி (NHM) மையம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் X – Ray Technician, Operation Theatre Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவித்தது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இப்போதே விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு விவரங்கள்:
X – Ray Technician பணிக்கு 01 பணியிடம், Operation Theatre Assistant பணிக்கு 01 பணியிடம் மற்றும் Multi Purpose Hospital Worker பணிக்கு 04 பணியிடம் என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. X – Ray Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Operation Theatre Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் OT Technician Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Multi Purpose Hospital Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானதாகும். மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. X – Ray Technician பணிக்கு மாதம் ரூ.10,000/- வழங்கப்படும்.
Join Our TNPSC Coaching Center
Operation Theatre Assistant பணிக்கு ,மாதம் ரூ.8,400/- வழங்கப்படும். Multi Purpose Hospital Worker பணிக்கு மாதம் ரூ.8,400/- வழங்கப்படும். இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ 10.06.2022 அன்று (நாளை) மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் இப்போதே விண்ணப்பித்து பயனடையலாம்.