NHAI தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 19.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Land Acquisition Assistant (LA) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Highways Authority of India (NHAI) |
பணியின் பெயர் | Land Acquisition Assistant (LA) |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NHAI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Land Acquisition Assistant (LA) பணிக்கு என மொத்தமாக 09 பணியிடங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
LA கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாநில அரசு அலுவலகத்தில் Revenue Officer பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
LA அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Land acquisition Matters, Issues especially Legal, Arbitration related to Land Acquisition போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
LA வயது வரம்பு:
Land Acquisition Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு NHAI-ஆல் அதிகபட்சம் 65 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
NHAI ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
NHAI தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Guideline / RFP படி Short List செய்யப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Short List செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
NHAI விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.04.2022 இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.