NHAI நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

NHAI நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Joint Advisor, Chief General Manager ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் நாளை (27.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் (NHAI) Joint Advisor பணிக்கு 05 இடங்கள் மற்றும் Chief General Manager பணிக்கு 08 இடங்கள் என மொத்தமாக 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Chief General Manager பணிக்கு Civil Engineering பாடப்பிரிவில் Degree பெற்றவர்கள் மற்றும் Joint Advisor பணிக்கு Technology, Engineering, Business போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, MBA, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Chief General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Group A சார்ந்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Joint Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Chief General Manager பணிக்கு அதிகபட்சம் 56 வயது எனவும், Joint Advisor பணிக்கு அதிகபட்சம் 48 வயது எனவும் NHAI நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Chief General Manager பணிக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை எனவும், Joint Advisor பணிக்கு ரூ.1,25,000/- எனவும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NHAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் செய்ய வேண்டும். நாளை (27.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!