இந்திய நிறுவனங்களில் அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு – டெலோயிட் சர்வே முடிவுகள்!
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ள நிலையில், நடப்பு ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டில் நிறுவனங்கள் வழங்க உள்ள ஊதிய அதிகரிப்பு குறித்து டெலோயிட் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
ஊதிய அதிகரிப்பு:
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் விளைவால் உலகளாவிய பொருளாதாரம் சரிவடைந்து பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் திறப்பதற்கும் நிலைமையை மேம்படுத்துவதற்கும் முழு உலகமும் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவால் பல நாடுகளின் பொருளாதாரம் மெதுவாக மீண்டும் முன்னேற தொடங்கியுள்ளது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிப்பு? உச்சநீதிமன்றம் மறுப்பு!
இது தொடர்பாக டெலாய்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது மற்றும் முதன்மை பார்வையாளர்கள் அனுபவமுள்ள மனித வள (HR) வல்லுநர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏழு பிரிவுகள் மற்றும் 24 துணைத் துறைகளில் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் 25 சதவிகித நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் இரட்டை இலக்க ஊதிய உயர்வை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இனி ‘இ-சேவை’ மையத்திலேயே புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல் & திருத்தம்!
இந்தியா இன்க் எனப்படும் இந்திய ஊடகங்கள் நாட்டின் சாதாரண (அரசு மற்றும் பெருநிறுவனங்களை உள்ளடக்கிய) துறையை குறிக்கும் கணக்கெடுப்பில், 2022 ஆம் ஆண்டிற்கான சராசரி ஊதிய அதிகரிப்பு 8.6 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார மேம்படுவதை குறிக்கிறது. இது 2019 ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு இணையாக உள்ளது. அதிலும், ஐடி துறையில் ஊழியர்களுக்கு அதிக ஊதிய உயர்வு வழங்க வாய்ப்புள்ளது. மேலும், விருந்தோம்பல், உணவகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிக குறைந்த ஊதிய உயர்வை மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது.