திருமணத்தை நிறுத்த வந்த செழியன்.. பதட்டத்தில் கோபி – அடுத்த வார “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தனக்கு சமையல் ஆர்டர் தான் முக்கியம் என சொல்லி மண்டபத்தில் தங்கிவிட, கோபி திருமணம் பற்றி தெரிந்து செழியனும், எழிலும் மண்டபத்திற்கு வருகின்றனர். அவர்கள் திருமணத்தை நிறுத்துவார்களா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல தடங்கல்களை மீறி கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார். பாக்கியாவை வெளியே அனுப்ப வேண்டும் என ராதிகாவின் குடும்பத்தினர் சொல்ல, ஆனால் கோபி அவள் இங்கே இருந்து கல்யாணத்தை பார்க்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் மண்டபம் ஓனர் வந்து ஆர்டரை கேன்சல் செய்ய சொல்ல, ஆனால் பாக்கியா இதில் நிறைய பெண்களின் வாழ்க்கை இருக்கிறது என சொல்லி, ஆர்டரை தொடர்ந்து செய்கிறார்.
மறுபக்கம் ராமமூர்த்தியை பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி, ஈஸ்வரி, செழியன், எழிலிடம் நடந்ததை சொல்லி திருமணத்தை நிறுத்த சொல்கிறார். உடனே செழியனும் எழிலும் மண்டபத்திற்கு கிளம்பி செல்கிறார்கள். அங்கே கோபி ராதிகாவை கல்யாண கோலத்தில் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
ஈஸ்வரியை அடிக்க கை ஓங்கிய ராதிகா.. துடித்து போன கோபி – ரணகளமான பாக்கியலட்சுமி சீரியல்!
Exams Daily Mobile App Download
மேலும் அவர்கள் இந்த திருமணத்தை நிறுத்துவார்களா இல்லை அவர்களை கண்டு கொள்ளாமல் திருமணம் நடக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது. எப்படியோ கோபி ராதிகா திருமணத்தில் அடுத்து அடுத்து பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க போகிறது. மேலும் ராதிகாவின் முதல் கணவர் ராஜேஷ் வராமல் கதை எடுத்து செல்லப்படமாட்டாது என்பதால், அவர் வந்தும் பிரச்சனை செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்