முதல் நாளே கண்டிஷன் போடும் ராதிகா குடும்பம், சிக்கலில் கோபி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தன் ஆசைப்படி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்க, ஆனால் இனிமேல் தான் அவருக்கு ஆப்பு வர போகிறது. முதல் நாள் இரவே ராதிகாவின் அம்மா இனி இது தான் உங்க குடும்பம் மயூ தான் உங்க மகள் என சொல்ல, கோபி எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நிற்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் எல்லாம் கைமீறி சென்றுவிட்டது. கோபி ராதிகா கழுத்தில் தாலிகட்டிவிட அதை தடுக்க முடியாமல் ஈஸ்வரி வருத்தத்தில் இருக்கிறார். கோயின் கல்யாணத்தை நினைத்து பாக்கியா வருத்தப்பட்டாலும், தனக்கு இனிமேல் தான் விடிவுகாலம் பிறக்க போகிறது என, தைரியத்துடன் இருக்கிறார். இன்றைய எபிசோடில் கல்யாணம் முடிந்த கையோடு கோபியை அனைவரும் தனியாக விட்டு செல்ல, என்ன செய்வது என தெரியாமல் கோபி இருக்கிறார்.
அப்போது வந்த ராதிகாவின் அண்ணனும் அம்மாவும், இனிமேல் இது தான் உங்க குடும்பம், மயூ தான் உங்களுடைய மகள், இன்னொரு குடும்பத்தை பற்றி நீங்க நினைத்து கூட பார்க்க கூடாது என கண்டிஷன் போட, கோபியால் எதுவும் பேச முடியாமல் போகிறது. சரி ராதிகாவுடன் சந்தோசமாக இருக்கலாம் என நினைக்க, ஆனால் அப்போது இனியா போன் செய்து, இனிமேல் என்னிடம் பேசாதீங்க நீங்க எனக்கு வேண்டாம் என அழ கோபி அவளை சமாதானம் செய்கிறார்.
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – அக். 12ம் தேதி மின்தடை! எச்சரிக்கை மக்களே!
Exams Daily Mobile App Download
அதை எல்லாம் பார்த்த ராதிகாவின் அம்மா ராதிகாவை எச்சரிக்கை செய்ய, ராதிகா எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் ராதிகாவுடன் சந்தோசமாக இருக்கலாம் என கோபி நினைக்க ஆனால், மயூ வந்து நடுவே படுத்துக் கொள்ள, கோபி தன்னுடைய கடுப்பை காட்டிக் கொள்ளாமல், பேசி சமாளிக்கிறார். வந்த முதல் நாளே ராதிகா வீட்டில் கோபிக்கு கண்டிஷன் போட இனி வரும் நாட்களை கோபி எப்படி கழிப்பார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்