அக்னி பாத் திட்டத்தின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை – ஒப்பந்தங்கள் இறுதி!
மத்திய அரசின் மூலம் இந்திய நாட்டின் இளைஞர்கள் ராணுவத்தில் அதிக பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அக்னி பாத் திட்டத்திற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது.
அக்னி பாத் திட்டம்:
17 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் நாட்டின் ராணுவ செயல்பாட்டில் அதிக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அக்னி பாத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 4 வருடங்கள் தற்காலிகமாக இந்த அமைப்பில் இளைஞர்கள் வேலை செய்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் இதற்க்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் மத்திய அரசு அக்னி பாத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தது.
அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் அக்னி வீரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். அக்னி வீரர்களுக்கான சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள் மற்றும் பலன்கள் அனைத்தும் பாதுகாப்பு படைகளுக்கான வீரர்களை போல் உள்ளது. அக்னி வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.
வேற லெவல் அப்டேட்டை களமிறங்கி இருக்கும் Google – உங்களின் வேலையே ஜாலியா மாறப்போகுது!
Exams Daily Mobile App Download
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. 14 அக்டோபர் 2022 அன்று இந்திய ராணுவத்தின் துணை ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வங்கிகள் வெளியேறும் அக்னிவீரர்களுக்கு அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்தவும்ம் அதற்கான கடன்களையும் வழங்கும் என்றும், “அக்னிபாத் திட்டத்தின்” கீழ் முதல் தொகுதி அக்னி வீரர்களுக்கு ஜனவரி 2023 க்குள் பயிற்சி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்