தொழிலில் முன்னேறிய பாக்கியா, கோபி முன் பாராட்டிய தொழிலதிபர் – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பல அதிரடி மாற்றங்கள் வர இருக்கிறது. ராதிகா கோபியின் திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் பாக்கியா தொழில் முன்னேற முயற்சிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவின் 25 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பாக்கியாவின் இந்த முடிவு சரி தான் என எழிலும் தாத்தாவும் ஆதரவாக இருந்தாலும், ஈஸ்வரியும் செழியனும் இனியாவும் கோபி வீட்டை விட்டு சென்றதற்கு பாக்கியா தான் காரணம் என சொல்கின்றனர். இந்த குடும்பத்திற்கு கஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என பாக்கியா நினைக்க ஆனால் அவர்கள் தினமும் பாக்கியாவை திட்டி குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறுபக்கம் கோபி ராதிகாவுக்கு திருமணம் செய்ய வேண்டும் என ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராதிகா திருமணத்திற்கு சரி என சொல்லாமலும், வேண்டாம் என சொல்லாமலும் இரு மனதுடன் இருந்து வருகிறார். இனி வரும் எபிசோடுகளில் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கொடுத்தவரை கோபி சந்திக்க இருக்கிறார். அவர் தொழில் பற்றி பேச அப்போது கோபிக்கு பாக்கியாவை இது தான் எங்களது தலைமை சமையல்காரர் என அறிமுகம் செய்து வைக்கிறார்.
பாக்கியா வாழ்க்கையில் வர போகும் அடுத்த இடி – சீரியலில் திடீர் திருப்பம்! ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
கோபி பாக்கியா இவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது ஒரு புறம் இருக்க சமையல் ஆர்டர் கொடுத்த தொழிலதிபருக்கு கோபி பாக்கியா கணவன் மனைவி என்ற உண்மை தெரிய வருகிறது. அவர் கோபி முன்னிலையில் பாக்கியாவின் திறமையை பற்றி பெருமையாக பேசுகிறார். மேலும் உங்களது மனைவியை இந்த அளவிற்கு செய்ய வைப்பது பெரிய விஷயம் என கோபியை பற்றியும் பெருமையாக பேசுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்