கோபி ராதிகாவுக்கு முட்டிக் கொண்ட சண்டை, இனியா தான் காரணமா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியும் ராதிகாவும் திருமணம் செய்ய போகும் சந்தோஷத்தில் இருக்க, ஆனால் ராதிகாவின் அம்மா செய்யும் வில்லத்தனத்தால் இருவருக்கும் இடையே சண்டை வர இருக்கிறது. அது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இத்தனை நாட்களாக வில்லனாக காட்டி வந்த நிலையில், தற்போது ராதிகா உடன் காதல் காட்சிகளால் காதல் மன்னனாக காட்டப்பட்டு வருகிறார். கோபி என்ன தான் குடும்பத்தை விட்டு வந்தாலும் இனியா மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கு பெரிய சோதனையாக வர போகிறது. அதாவது ராதிகாவிடம் ஏற்கனவே என்னுடைய மகளை அழைத்து கொண்டு தான் வீட்டை விட்டு வருவேன் என சொல்ல, ராதிகாவும் சரி என சொல்கிறார்.
ஆனால் இப்போது கோபி இனியாவை பற்றி பேசுவதும் அவள் மீது பாசத்தை காட்டுவதும் ராதிகாவின் அம்மாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. அவர் ராதிகாவிடம் கோபி இப்படி இனியா மீது பாசமாக இருந்தால் அதே காரணத்தை வைத்து பாக்கியாவுடன் சேர்ந்துவிடுவார். அதனால் நீ கோபியை பாக்கியா குடும்பத்துடன் சேர விடாமல் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் ராதிகா தேவை இல்லாமல் பேசாதே என சொன்னாலும், அம்மா சொல்வது சரியாக இருக்குமா என்ற எண்ணத்துடன் இருக்கிறார்.
பாரதியை கொடுமைப்படுத்தும் தீவிரவாதிகள், பெண்களை நாசம் செய்தவனை கொலை செய்த கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் ராதிகா அம்மா பேச்சை கேட்டு கோபியை இனியா உடன் பழக விடமால் செய்ய போகிறார். அதெல்லாம் பிடிக்காத கோபி ராதிகாவிடம் சண்டை போட அப்போ உங்களுக்கு நான் முக்கியமில்லையா என ராதிகா கேட்கிறார். கோபிக்கு அப்போது தான் நிஜ சிக்கல் வர இருக்கிறது. கோபி ராதிகா பேச்சை கேட்பாரா அல்லது அப்பா பாசத்தில் இனியா பக்கம் செல்வாரா என்பது எல்லாம் இனி சீரியலில் பெரிய திருப்பமாக இருக்க போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்