பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!

0
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படும் என்கிற தகவல் பரவி வந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததையொட்டி பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு சமயங்களில் ஓரளவுக்கு கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதால் மாஸ்க் அணிந்த படி சில மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

மேலும், இந்த இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் பாடங்கள் கற்பிக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறையில் கூட கல்வித் திறனை மேம்படுத்த சில மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கற்றல் திறன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

தமிழகத்திலும் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் கோடை விடுமுறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால் மாணவர்கள் முடிந்தவரைக்கும் சமூக இடைவெளியை பள்ளிகளில் பின்பற்ற கூறியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!