பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் அடுத்த கல்வியாண்டு துவக்கம் – அரசு அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 13 முதல் அடுத்த கல்வியாண்டு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வியாண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும் எனவும், எத்தனை நாட்கள் விடுமுறை என்பதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் துவக்கம்:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் மாணவர்கள் முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றதால் மாணவர்களின் கல்வித்திறனும் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் கல்வித்திறனை மீட்டெடுத்தற்காக அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இந்த செயலி மூலம் எளிதாக அப்டேட் செய்யலாம்!
மாணவர்களின் சிரமத்தை குறைக்க இந்தாண்டு பொதுத்தேர்வுகளுக்காக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான விடுமுறை நாட்கள், பள்ளி இயங்கும் நாட்கள் என அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஜூன் 13 ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆரம்பமாகும் எனவும், இந்த கல்வியாண்டில் மட்டுமே மொத்தமாக 237 நாட்கள் பள்ளி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை வகுப்புகள் அக்டோபர் மாதம் நிறைவடையும் மற்றும் இரண்டாவது தவணை வகுப்புகள் நவம்பர் மாதத்தில் நிறைவடையும். தீபாவளி பண்டிகையின் போது 26 நாட்கள் விடுமுறை எனவும், 36 நாட்கள் கோடை விடுமுறை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் மட்டுமே மொத்தமாக 128 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.