பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 முதல் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!
மகாராஷ்டிராவில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 2ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறை முடிந்து ஜூன் 15ஆம் தேதியில் இருந்து அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் துவக்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இந்த ஆண்டு ஓரளவு கொரோனா பரவல் குறைந்ததனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்றதனால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வி திறனை சீர்படுத்த சில மாநிலங்களில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட்டன.
இந்தியாவில் 8 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
மேலும் சில மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் கூட கற்றல்திறன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து சில மாநிலங்களில் இழந்த கல்வி திறனை இந்த கல்வி ஆண்டில் பெற்று விட வேண்டும் என ஆசிரியர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு மே, ஜூன் ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்.
Exams Daily Mobile App Download
ஆனால், இந்த ஆண்டு காலம் தாழ்த்தி தான் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்ல தயாராக இருக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகாராஷ்டிரா மாநில பள்ளி மாணவர்களுக்கு மே 2 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15 ஆம் தேதி வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதனிடையே கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.