அடுத்து வரப்போகும் 4 நாட்களும் கனமழை வெளுத்து வாங்கும் – தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் ஆரஞ்சு அலர்ட்!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை, இடி மின்னலுடன் பெய்து வரும் நிலையில், தற்போது கேரளா மாநிலத்திலும் தமிழகத்தை தொடர்ந்து ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை:
வட கிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் நவம்பர் மாத ஆரம்பம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக விடுக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இன்று தான் தமிழகத்தில் மழை சற்று வெறித்துள்ளது.
உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை மறுநாள் (15.11.2022) இந்த பகுதிகளில் Power cut!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கேரளாவில் அடுத்து வரும் 4 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்றும், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு,சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநில போலீசார் இதற்கான மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.