சீரியல் நடிகருடன் ‘செய்தி வாசிப்பாளர்’ கண்மணிக்கு நிச்சயதார்த்தம் – விரைவில் டும் டும்! குவியும் வாழ்த்துக்கள்!
செய்தி வாசிப்பாளரான கண்மணி மற்றும் சீரியல் பிரபலமான நவீன் இருவருக்கும் நேற்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கண்மணி நிச்சயதார்த்தம்:
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் தான் கண்மணி. கண்மணிக்காகவே பலரும் சன் தொலைக்காட்சியில் செய்தியினை தினமும் பார்க்க ஆரம்பித்தனர். கண்மணியை வைத்து பல மீம்கள் கூட சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வந்தது. செய்தி வாசிப்பாளராக இருந்து எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இதற்குப் பிறகு கண்மணிக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தன. அதாவது பல திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார்.
பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் – இன்றைய எபிசோட்!
சமீபத்தில் வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படத்தில் கூட செய்தி வாசிப்பாளராக கண்மணி நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஐந்து லட்சம் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். கண்மணிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பலம் இருப்பதால் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்வார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கண்மணிக்கு இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நவீன் உடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நவீனும் திரையுலகில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான். எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்களை வைத்திருக்கிறார்.
இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது நவீனுக்கு கண்மணி வெட்கத்துடன் மோதிரத்தை போட்டுவிட்டு இருக்கிறார். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதா அல்லது காதல் திருமணமா என ரசிகர்கள் கேட்டபடி இருக்கின்றனர். மேலும் நவீன் மற்றும் கண்மணி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது . நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் நவீன், கண்மணி இருவருமே அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்களும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.