தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி வரைக்கும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை:

வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அதனையொட்டிய பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மட்டுமே தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அதில் திருக்குவளை பகுதியில் தான் 130 மிமீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இதனையடுத்து, கீழச் செருவை, கோவில்பட்டி பகுதியில் 110 மிமீ மழையும், அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு பகுதியில் 90மிமீ மழையும், பெலாந்துறை, சொலையாறு பகுதியில் 80மிமீ மழையும், தேவக்கோட்டை, ஏற்காடு பகுதியில் 70மிமீ மழையும், மாமல்லபுரம் பகுதியில் 30 மிமீ மழையும், ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம் பகுதியில் 20மிமீ மழையும் பதிவாகியிருக்கிறது. சென்னையை பொறுத்த வரைக்கும் நேற்று காலை 10 மணியில் இருந்து மழை பெய்திருக்கிறது. இதனால், அங்குள்ள சாலை முழுவதும் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை? அரசாணை வெளியீடு!

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரைக்கும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் 50 கிமீ முதல் 60 கிமீ வரைக்கும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி வரைக்கும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!